Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முழுநேர பயணத்தடை 21ஆம் திகதி வரையில் நீடிப்பு!


நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்வரும் 14ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது நாட்டின் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இவ்வாறு பயணத்தடையை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments