Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை


இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை தொடரும் என்றும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, புத்தளம், குருநாகல், கம்பஹா,கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வானிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, பதுளை, மொனராகலா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments