Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முகநூல் நண்பி வீட்டில் 3 இலட்ச ரூபாய் நகை திருடிய பெண் கைது!


முகநூல் நண்பியின் வீட்டிற்கு சென்று  3 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை அபகரித்தார் என்ற சந்தேகத்தில் யுவதி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

சீதுவ பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் ஊடாக மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பிறிதொரு யுவதியுடன் நண்பியாகியுள்ளார்.

இந்த நிலையில் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 24 வயதாக யுவதியை கடந்த ஜனவரி மாதமும் கடந்த வாரமும் தனது வீட்டு வருமாறு சீதுவ பிரதேச யுவதி அழைத்துள்ளார்.

அவரின் அழைப்புக்கேற் சீதுவ யுவதியின் வீட்டுக்குச் சென்ற மினுவாங்கொட யுவதி குறித்த வீட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் தங்கச் சங்கிலியை அபகரித்ர் சென்றுள்ளதோடு , கடந்த வாரம் 3 இலட்சம் பெறுமதியுடைய தங்க சங்கிலியையும் அவர் அபகரித்துச் சென்றுள்ளதாக சீதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments