திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டிருந்த இளைஞன் அப்பெண்ணை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி படுகொலை செய்து குழி தோண்டி புதைத்துள்ளார்.
அம்பகாஸ்தோவ பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
கந்தேஎல கொடகும்புர பிரேதசத்தை சேர்ந்த 36 வயதுடைய திருமணமான பெண்ணுடன் அப்பகுதியை சேர்ந்த 33 வயதுடைய இளைஞன் காதல் கொண்டுள்ளார். www.tamilnews1.com
அந்நிலையில் கடந்த 16ஆம் திகதி காதலர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் குறித்த இளைஞன் அப்பெண்ணை கூரிய ஆயுதத்தினால் தாக்கியதில் அப்பெண் உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
உயிரிழந்த பெண்ணை குழி தோண்டி புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். www.tamilnews1.com
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இளைஞனை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். www.tamilnews1.com
அதேவேளை , கொலை செய்த பெண்ணை புதைத்த இடத்தினை இளைஞன் அடையாளம் காட்டியுள்ளதாகவும் , நீதிமன்றின் உத்தரவினை பெற்று புதைகுழியை தோண்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். www.tamilnews1.com
No comments