Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பூம்புகார் கொலை - சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்!


அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மஉள்ளிட்ட இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்தவரும் பூம்புகாரில் வசித்து வருபவருமான துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

அவர் தேங்காய் துருவல் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண் மற்றும் அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று(20) முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிவான் இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தகாத உறவை பேணிய நபரை காப்பாற்ற கொல்லப்பட்டவரின் மனைவி மாறுபட்ட வாக்குமூலத்தை அளித்துள்ளார். 

கொல்லப்பட்டவரின் மனைவியுடன்  தொடர்புடையவரும் கொலையுடன் தொடர்புள்ளமை ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

அதனை முதலாவது சந்தேக நபரான கொல்லப்பட்டவரின் மனைவியும் தனது வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் பின்னர் தனக்கும் இரண்டாவது சந்தேக நபருக்கும் தொடர்புள்ளமை உண்மை, ஆனால் கொலையை தான் மட்டுமே செய்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் இரண்டாவது சந்தேக நபர் காலினால் தனது கணவனின் கழுத்தை பிடித்து வைத்திருந்த போது தான் தேங்காய் துருவல் கட்டையால் தாக்கியதாக ஒத்துக்கொண்டார்.

இதேவேளை, இரண்டாவது சந்தேக நபருக்கு 40இற்கு மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வன்புணர்வு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது

No comments