Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொழும்பு வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு அமைச்சரின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதாம்!


நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலை மலசலக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட  கைக்குண்டு, அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்தே எடுத்தேன் என சந்தேகநபர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். 

கைக்குண்டு மீட்கப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவில், தடுத்துவைக்கப்பட்டுள்ள திருகோணமலை உப்புவேலி பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்திலே​யே அவ்வாறு தெரிவித்துள்ளார். 

கட்டட நிர்மாணப்பணிகளில் பணியாற்றும்  குறித்த சந்தேகநபர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ  வாசஸ்தலத்துக்கு திருத்தப் பணிகளுக்காக சென்றுள்ளார். 

அங்குள்ள அறையொன்றின் ​மேசையின் இலாச்சியில் இருந்து கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் சிலவற்றை இவரும் இவருடன் சென்ற நபர் ஒருவரும் எடுத்து சென்றுள்ளனர். 

கைக்குண்டை இந்த சந்தேகநபர் வைத்துக்கொண்டதுடன், தோட்டாக்களை அவருடன் சென்ற  மற்றுமொருவர் எடுத்துச் சென்றுள்ளார்.

தோட்டாக்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நபர் வசிப்பதாகக் கூறப்பட்ட மஹவ மற்றும் வெலிக்கந்த பிரதேசங்களுக்கு நேற்று (16) சென்றிருந்த விசேட விசாரணைப் பிரிவினர் அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.

கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்ட அந்த வீட்டில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் தற்போது வசித்துவருகின்றார். எனினும், தற்போதைய அமைச்சர் அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு வருகைதருவதற்கு முன்னரே, கைக்குண்டு மற்றும் ​தோட்டக்களை தான் எடுத்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments