Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அநுராதபுரம், வெலிக்கடை சிறைகளில் CCTV இல்லையாம்!


வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் சிசிடிவி கமெராக்கள் இல்லை என சிங்கள பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது அங்குனகொலபெலஸ்ஸ, களுத்துறை மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலைகளில் மட்டுமே இந்த வசதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே லொஹான் ரத்வத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு சிசிடிவி காட்சிகள் கிடைக்காது என்றும் சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சிறைச்சாலைகளுக்கு வருபவர்கள் கையொப்பமிடும் பதிவுப் புத்தகத்தை கொண்டு, தேவையெனில் விசாரணையை மேற்கொள்ள முடியும் என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளதாக குறித்த செய்தி அமைந்துள்ளது.

No comments