Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

2 இந்திய படகுகளுடன் 23 பேர் கடலில் கைது


இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார். 

கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து அவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கைதானவர்கள், காங்கேசந்துறை மடிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, இன்று கொரோனா பரிசோதனையின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர்களின் தொடர் அத்துமீறலைக் கண்டித்து எதிர்வரும் 17 ஆம் திகதி கடலில் இறங்கிப் போராட்டம் நடாத்த கூட்டமைப்பு அழைப்பு விட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments