Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு வைத்திய சாலைக்குள் புகுந்து வாள் வெட்டு


வாள் வெட்டில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவரை வைத்திய சாலைக்குள் புகுந்து கும்பல் ஒன்று சரமாரியாக வாளினால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது. 

கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

வாள் வெட்டு சம்பவம் ஒன்றுக்கு இலக்காகிய ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் சத்திர சிகிச்சை கூடத்திற்கு முன்பாக காத்திருக்க வைக்கப்பட்டு இருந்தார். 

அந்நிலையில் , வைத்திய சாலைக்குள் வாளுடன் புகுந்த கும்பல் ஒன்று , சத்திர சிகிச்சைக்காக காத்திருந்த நபர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டனர். 

குறித்த கும்பலிடம் இருந்து தப்பித்து அவர் சத்திர சிகிச்சை கூடத்தினுள் ஓடியதால் , வாள் வெட்டுக்குழுவினர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர். 

No comments