Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இணுவில் கோடரியை காட்டி கொள்ளையிட்ட சம்பவத்தில் ஒருவர் கைது - ஒரு தொகை நகைகளும் மீட்பு!

 


இணுவிலில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கோடாரியை காட்டி பயமுறுத்தி , வீட்டில் இருந்தவர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் கடந்த 3ஆம் திகதி அதிகாலை மூன்று பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அத்துமீறி வீட்டினுள் நுழைந்து , வீட்டில் இருந்தவர்களுக்கு கோடாரியை காட்டி பயமுறுத்தி 21 பவுண் நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்று இருந்தனர். 
 
சம்பவம் தொடர்பில் உரிமையாளர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது. 
 

அந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து இருந்த நிலையில் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , தாவடி பகுதியை சேர்ந்த 26 வயதான நபரை கைது செய்தனர். 
 
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரிடம் இருந்து ஒரு தொகை நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 
 
குறித்த சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

No comments