Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளி.தர்மபுரத்தில் சுற்றிவளைப்பு - பெண் உள்ளட்ட எட்டுப்பேர் கைது!


கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பெண் உள்ளிட்ட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்லாற்று பகுதியில் கடந்த 4 ஆம் திகதி இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெறுவதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற பொலிஸார் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.

குறித்த சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்றையதினம் தர்மபுரம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், பொலிஸ் சிறப்பு அதிரடிபடையினர் இணைந்து குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இச்சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் 04, வாள் 01, இடியன் துப்பாக்கி 01, சட்டவிரோத கசிப்பு 18 லீற்றர் மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments