Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அப்பளம் சாப்பிட்டதற்காக வாயில் சூடு வைத்த தாய் - சிறுமி வைத்திய சாலையில்


கடைக்கு சென்று அப்பளம் வாங்கி வரும் வழியில் அப்பளக்கட்டில் இருந்து ஒரு அப்பளத்தை எடுத்து பச்சையாக சாப்பிட்ட சிறுமிக்கு தாயார் வாயில் சூடு வைத்துள்ளார். 

தாயார் வாயில் சூடு வைத்தமையால் , வாய் வெந்து புண்ணான நிலையில் சிறுமி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாயாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
 
அக்கராஜன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
 
சிறுமியின் தாயார் , 5 வயதான சிறுமியை கடைக்கு சென்று அப்பளக்கட்டு வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார். சிறுமி அப்பளக்கட்டை வாங்கி வரும் வழியில் கட்டில் இருந்து ஒரு அப்பளத்தை எடுத்து பச்சையாக சாப்பிட்டு உள்ளார். 
 
அதனை அறிந்த தாயார் சிறுமியின் வாயில் சூடு வைத்துள்ளார். அதனால் வாய் வெந்து புண்ணாகி உள்ளது. வேதனையால் சிறுமி துடி துடித்து கதறி அழுததை அடுத்து சத்தம் கேட்டு வந்த சிறுமியின் தாத்தா சிறுமியின் நிலைமையை பார்த்ததும் , அக்கராஜன் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளார். 
 
அதனை அடுத்து அங்கு வந்த பொலிஸார் தாயாரை கைது செய்ததுடன் , சிறுமியை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். 
 
இச்சம்பவம் நடைபெறும் போது , சிறுமியின் தந்தையார் தொழிலுக்கு என்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments