Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மன்னார் பொலிஸில் சரணடைய சென்றவர்களை மோதிய டிப்பர் - திட்டமிட்ட சதி என குற்றச்சாட்டு!


மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைய சென்ற இளைஞர்களை திட்டமிட்டு டிப்பர் வாகனத்தால் மோதியதாக கூறப்படும் சம்பவத்தில் ஐந்து இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். 

மன்னார் பொலிஸ் நிலையம் முன்பாக இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஒரு தரப்பினரால் மற்றைய தரப்பினர் மீது முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

அந்நிலையில் இன்றைய தினம் மற்றைய தரப்பை சேர்ந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து பரஸ்பர முறைப்பாட்டை வழங்கும் நோக்குடன் பொலிஸ் நிலையம் சென்று இருந்தனர். 

பொலிஸ் நிலையம் சென்றவர்கள் உள்ளே செல்ல தயாராக பொலிஸ் நிலையத்தின் முன்பாக வீதியோரமாக நின்ற போது , வீதியால் மிக வேகமாக வந்த டிப்பர் வாகனம் பொலிஸ் நிலையம் முன்பாக நின்றவர்களை மோதி தள்ளிக்கொண்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. 

குறித்த சம்பவத்தில் அவ்விடத்தில் நின்ற 5 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தம்மோடு முரண்பட்டவர்களே டிப்பர் வாகனம் மூலம் திட்டமிட்டு விபத்தினை ஏற்படுத்தினர் எனவும், அவர்கள் தமது பண பலத்தினால் இதனை வெறும் விபத்தாக மாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன என காயமடைந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ள நிலையில் டிப்பர் வாகனத்தை தேடும் நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர். 

No comments