ஆபாச பேச்சுக்களை தடை செய்வது தொடர்பான சட்டவரைவை அரசிதழில் வெளியிட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் ஊடாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டவரைவை தயாரிப்பதற்கு 2020 செப்ரெம்பர் 21ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.
அதற்கமைய சட்டவரைவு தயாரிக்கப்பட்டு சட்ட மா அதிபரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டவரைவை அரசிதழில் வெளியிட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
No comments