வவுனியாவில் 12 வயது மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகிய நபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளனர்.
வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த 12 வயது பாடசாலை மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் போது மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் போது மாணவி கர்ப்பமாக உள்ளமை வைத்தியர்களால் கண்டறியப்பட்டது.
அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் மாணவியிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது , தன்னை நபர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments