Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பச்சை மட்டையில் முள்ளுக்கம்பி சுற்றி தாக்குதல்! (காணொளி இணைப்பு)


முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது , இராணுவத்தினர் பச்சை மட்டையில் முள்ளுக்கம்பியை சுற்றி , அதனால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுக்க முற்படட முல்லைத்தீவு சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீது இன்றைய தினம் இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்த நிலையில் , வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


அந்நிலையில் ஊடகவியலாளர் தாக்குதலுக்கு இலக்கான பகுதியில் பச்சை மட்டை ஒன்று முள்ளுக்கம்பி சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை அருகில் உள்ள முட்கம்பி வேலி மீது ஊடகவியலாளரை தூக்கி வீசி தாக்குதல் மேற்கொண்டமைக்கு சான்றாக வேலியிலும் இரத்த கறைகள் காணப்படுகின்றன. 

படங்கள் :- குமணன் (முல்லைத்தீவு ஊடகவியலாளர்)

No comments