Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

திருகோணமலை படகு விபத்து - 4 மாணவர்கள் உட்பட ஆறு பேர் சடலமாக மீட்பு - உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்!


திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அந்த படகு பாதையில் 20 பேர் பயணித்துள்ளனர். அதில், சிலர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வரும் வேளையில் இதுவரை ஆறு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால், கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகு சேவை இடம்பெற்று வருகிறது.

சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதனை விடவும் அதிகரிக்கும் என அச்சம் கொண்டிருக்கும் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments