Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.தாவடியில் இலக்கத்தகடு அற்ற பேருந்து மோதியதில் பாடசாலை மாணவி உள்ளிட்ட இருவர் படுகாயம்!


யாழ்ப்பாணம் - தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி சந்தியில் இன்று காலை இந்த விபந்து இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது மோட்டார் சைக்கிலில் சென்ற கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி உட்பட இருவர்  படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments