விபத்துக்குள்ளான எரிபொருள் தாங்கியில் (பவுசர்) இருந்து , வெளியேறிய பெற்றோலை சேகரிக்க முற்பட்டவர்கள் , தாங்கி வெடித்து சிதறியதில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 98 பேர் உயிரிழந்துடன் , 100 க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளமையால், மேலும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுனில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் தாங்கி ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனை அடுத்து , எரிபொருள் தாங்கியில் இருந்து வெளியேற தொடங்கியதும், அதனை அப்பகுதியில் இருந்தவர்கள் சேகரிக்க முற்பட்டனர்.
அதனை கண்டு, வாகன சாரதிகள் எச்சரிக்கை விடுத்திருந்த போதும் மக்கள் எரிபொருளை சேகரிக்க முயன்ற போது வெடிப்பு ஏற்பட்டது என பொலிஸாரின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments