பயணப்பொதியில் இருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதான தம்பதியினரை 48 மணிநேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்று அனுமதியளித்துள்ளது.
மாளிகாவத்தை தொடர்மாடியில் வசித்து வந்த பாத்திமா மும்தாஜ் (வயது 44) என்பவர் , கடந்த 4ஆம் திகதி சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மட்டக்குளி பகுதியை சேர்ந்த தம்பதியினரை நேற்றைய தினம் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மஹர பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தி , இருவரையும் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் அனுமதி கோரினர். அதற்கு பதில் நீதவான் அனுமதி வழங்கினார்.
No comments