திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பத்வெவ பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த டபிள்யூ.ஏ.நளீன் சமிந்த (40வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது இரண்டாவது மனைவியுடன் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் , சில நாட்களாக தனிமையில் வசித்து வந்த நிலையிலையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்திருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
அதேவேளை உயிரிழந்தவர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஆறுமாதம் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments