Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

"கணணித்துறையில் சாதித்த திலீபன் எம்.பி யை தரக்குறைவாய் பேசாதே" என சிறிதரனுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!


வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக இன்றைய தினம் சனிக்கிழமை  ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜமாணிக்கம் சாணக்கியனின் பெயரை , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் "முஹமது சாணக்கியன்" என விளித்து பேசினார். 

அதன் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் , சக நாடாளுமன்ற உறுப்பினர்  சாணக்கியனின் பெயருக்கு முன்னால் "முஹமது" என விளித்தமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் , அதனை ஹன்சால்டில் இருந்து நீக்குமாறும் கோரி இருந்தார். 

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபனை " படிப்பறிவில்லாதவர்கள் போல" என தொனிப்பட கருத்தும் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையிலையே , இன்றைய தினம் வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். 

 








No comments