Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கிளாலியில் வன்முறை கும்பல் அட்டகாசம் - தனித்து நின்று விரட்டியடித்த குடும்பஸ்தர்!


கிளாலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வாள் வெட்டுக்கும்பலை குடும்பஸ்தர் தனித்து நின்று , வீட்டில் இருந்த கத்தி மற்றும் மிளகாய்த்தூள் துணையுடன் விரட்டி அடித்துள்ளார். 

கிளாலி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது, 
 
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை 2 மணியளவில் வாள்கள் , கைக்கோடாரிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் , 10க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய  கும்பல் ஒன்று  உட்புகுந்து வீட்டின் ஜன்னல்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவற்றின் கண்ணாடிகளை உடைத்தனர். 
 
பின்னர் வீட்டின் பிரதான கதவினை கோடாரியால் கொத்தினர். அதன் போது உசார் அடைந்த குடும்ப தலைவர் தனது மனைவி , பிள்ளைகளை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு , தனியாளாக , தாக்குதலாளிகளை எதிர்கொள்ள துணிந்து , சமையலறையில் இருந்த கத்தி மற்றும் , மிளகாய் தூள் என்பவற்றால் தாக்குதலாளிகள் மீது தாக்குதலை மேற்கொண்டார். 
 
எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 
 
அதேவேளை , அவரது மனைவி பளை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் , தாக்குதலாளிகளை தமக்கு தெரியும் என அவர்களின் வீடுகளை , தாக்குதலுக்கு உள்ளான குடும்பம் இனம் காட்டியுள்ளது. 
 
அதன் அடிப்படையில் அங்கு பொலிசார் சென்ற போது , தாக்குதல் சந்தேக நபர்கள் வீடுகளில் தங்கியிருக்க வில்லை. இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 






No comments