Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நோயாளர்களை வானில் ஏற்றி வந்த சாரதி மாரடைப்பால் உயிரிழப்பு!


வவுனியாவில் இருந்து நோயாளர்களை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு  வானில் ஏற்றி வந்த வான் சாரதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

வவுனியா வீரபுரம் பகுதியை சேர்ந்த அன்ரன் ஜெயராஜ் (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வானில் பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் திடீரென சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

உடனே அவர் வாகனத்தை வீதியோரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 

மாரடைப்பு ஏற்பட்டவுடன் , வீதியோரமாக வாகனத்தை நிறுத்தியமையால் , வாகனத்தில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 

No comments