Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வாழ்வில் ஒன்றிணைந்தவர்கள் சாவிலும் ஒன்றிணைந்தனர்!


வாழ்வில் ஒன்றிணைந்த தம்பதி சாவிலும் ஒன்றிணைந்த மனதை உருக்கும் சம்பவம் சாவகச்சோி - சரசாலை வடக்கில் இடம்பெற்றிருக்கின்றது. 

மனைவியின் பிரிவை தாங்க முடியாத ஏக்கத்தில் சில மணிநேரத்தில் கணவனும் உயிரிழந்திருக்கின்றார். 

தம்பதியினரின் சடலங்கள் ஒன்றாக தகனம்செய்யப்பட்டது.

சரசாலை பகுதியை சேர்ந்த கதிரவேலு முருகேசர் (வயது 93) அவருடைய மனைவி முருகேசர் தங்கம்மா (வயது93) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

அதேவேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் சாவகச்சேரி பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 87 வயதான மனைவி உயிரிழந்த சோகத்தில் 97 வயதான கணவனும் உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

No comments