Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

காணி உரிமையாளர்கள் - ஆளுநர் சந்திப்பு திடீர் இரத்து!


வடக்கு மாகாண ஆளுநருடன் மாதகல் காணி உரிமையாளர்கள் சந்திப்பதற்கு இன்று ஏற்பாடுகள் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் திடீரென அந்த சந்திப்பை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தால் காணி உரிமையாளர்களுக்கு  இன்று மதியம் 2 மணிக்கு வடமாகாண ஆளுநர் காணி உரிமையாளர்களை சந்திக்கவிருப்பதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென அந்த சந்திப்பை ரத்து செய்யப்பட்டதாகவும் நாளை காலை 8 மணிக்கு அந்த சந்திப்பு நடைபெறும் எனவும் ஒரு சில காணி உரிமையாளர்களுக்கு பிரதேச
செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேரடியாக சென்று காணி உரிமையாளர்கள் கேட்டபொழுது,

 இந்த சந்திப்பு தொடர்பில் நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது தொடர்பாகவோ நாளை இந்த சந்திப்பு இடம் பெறுவது தொடர்பாகவோ எமக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆளுநரை சந்திக்க தூர இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டதுடன் அங்கிருந்த மக்கள் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை மாதகலில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் 1.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டத்தை அடுத்தா சந்திப்பினை ஆளுநர் இரத்து செய்தார் என்பதனை அறிந்துகொள்ள முடியவில்லை. 

No comments