வீதியில் பயணித்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன் - அம்மன் வீதியில் கிளி கடைக்கு அருகாமையில், இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தர்மடம் பழம் வீதியை சேர்ந்த வைத்தியலிங்கம் செல்வரத்தினம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
No comments