வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற நபர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில், திருகோணமலையை சேர்ந்த சிவபாலசுந்தரம் மயூரன் (33வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்று வரும் , 69வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் நடுவராக செயற்பட்ட இவர், கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு புகையிரதத்தில் வந்து , அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது வீதியை கடக்க முற்பட்ட யானை இவரை தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கெப்பித்திகொல்லேவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments