Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பாகிஸ்தானை குற்றம் சாட்டும் போது மற்றெல்லா விரல்களும் இங்குள்ள இவர்களை காட்டுகின்றன


  "சொறி" (Sorry) என்று கூட சொல்லாதவர்கள் ஆளும்-வாழும் நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். சுட்டும் விரலால் பாகிஸ்தானை குற்றம் சாட்டும் போது மற்றெல்லா விரல்களும் இங்குள்ள இவர்களை காட்டுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

 
குறித்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
பிரியந்த குமாரவை கொலை செய்த பாகிஸ்தான் அடிப்படைவாதிகளுக்கு உச்ச தண்டனை வேண்டும். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதை நாம் கோருகிறோம்.  
 
ஆனால், நம் நாட்டில், மிருசுவில் தமிழ் கிராமத்தில், பாலகர்கள் உட்பட 8 பேரை கொலை செய்ததால், கைதாகி, எமது ஆட்சியின் போது ஜூன் 2015ம் வருடம், முதன் முறையாக, இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட, சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ சிப்பாயை, ஜனாதிபதி கோதாபாய பதவிக்கு வந்த உடனேயே, 2020ம் வருடம் முதல் வேலையாக விடுவித்தார்.  
 
இன்று இவர்கள்தான் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுகிறார்கள்.இப்படி பல. இது ஒரேயொரு உதாரணம் மட்டுமே. 
 
நடந்தவைகளை ஒப்புவித்து ஒப்பாரி அரசியல் செய்பவன் நானில்லை. ஆனால், இந்த இரட்டை நிலைப்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இலங்கையிலும் நடந்த குற்றங்களை ஏற்று “சொறி” சொல்லும் காலம் வர வேண்டும். இல்லாவிட்டால் மீட்சி இல்லை என பதிவிட்டுள்ளார்.

No comments