Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கடற்தொழில் அமைச்சரின் உறுதி மொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது!


ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்வினை பெற்று தருவேன் என  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து , யாழ்.மாவட்ட மீனவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 
 
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.
 
யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக போராட்டகாரர்கள் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை வழி மறித்து சில மணிநேரம் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டு இருந்தது. 
 
அந்நிலையில் போராட்டக்காரர்களை நேரில் வந்து சந்தித்த கடற்தொழில் அமைச்சரின் உறுதி மொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 







No comments