Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பிரதமர் மஹிந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்


இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் குடும்பத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்தியாவிற்கு நேற்று சென்ற பிரதமர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.

அதனையடுத்து, இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கோவில் நுழைவாயிலில் தேவஸ்தான செயல் அலுவலர் ஜபகர் ரெட்டி, அர்ச்சகர்கள் மரியாதையுடன் பிரதமரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

சுவாமி தரிசனத்திற்கு பின்னர் பிரதமர் தங்க கொடி மரத்தை தொட்டு வணங்கி தரிசனம் செய்தார். இதையடுத்து ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து வைக்க தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்களை வழங்கினர்.






No comments