கடற்தொழில் அமைச்சரை கண்டதும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் போராட்ட களத்தில் இருந்து நழுவி சென்றனர்.
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து , யாழ்.மாவட்ட மீனவர்களால் இன்றைய தினம் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களுடன் கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கெடுத்து இருந்தனர்.
அந்நிலையில் போராட்டம் இடம்பெற்ற யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்த போது , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் போராட்ட இடத்தில் இருந்து நழுவி சென்றனர்.
இதேவேளை கடற்தொழில் அமைச்சர் , தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினை பெற்று தருகிறேன் என மீனவர்களுக்கு அளித்த உறுதிமொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments