மகனை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற தந்தையை பொலிஸார் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.
ஹெரானை வெல்லம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹொரண நீலக எனும் நபர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்துள்ளார்.
அந்நிலையில் கடந்த வாரம் தனது மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு அவரது கைகள் கால்கள் என்பவற்றை கூரிய ஆயுதங்களால் வெட்டி காயங்களை ஏற்படுத்தி இருந்தார்.
அச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் மனைவி முறையிட்டுள்ளதுடன் , காயங்களுக்கு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதனால் அவர்களது 7 வயது மகன் பாட்டியின் (அம்மாவின் அம்மா) பாதுகாப்பில் அவர்களது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது மாமியார் (மனைவியின் தாய்) வீட்டுக்கு T - 56 ரக துப்பாக்கியுடன் சென்ற நபர் வானத்தை நோக்கி சுட்டு, வீட்டில் இருந்தவர்களை மிரட்டி தனது மகனை தன்னுடன் கடத்தி சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வீட்டார் அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்த போது பொலிஸாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
அதன் போது பதிலுக்கு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குறித்த நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments