முன்னாள் மனைவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய எயிட்ஸ் நோயாளியான கணவனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எயிட்ஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா ? என பரிசோதனை மேற்கொள்ள வைத்திய சாலையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாடகை கார் சாரதிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று இருந்தது. கணவன் வாடகை கார் சாரதியாக இருந்தமையால் பல பெண்களுடன் தகாத உறவுகளில் ஈடுபட்டுள்ளார்.
அந்நிலையில் கடந்த 06 ஆண்டுகளுக்கு முன்னர் , தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் , அவர் எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டு இருப்பதனையும் மனைவி அறிந்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனது தாய் வீட்டிற்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது முன்னாள் மனைவியை சந்திக்க வந்த வாடகை கார் சாரதியான கணவர் , தான் திருந்தி விட்டதாக கூறி மன்னிப்பு கோரியுள்ளார். பின்னர் முன்னாள் மனைவிக்கு போதை மாத்திரை கலந்த குளிர் பானத்தை வழங்கியுள்ளார்.
அதனை குடித்த மனைவி மயங்கி சரிந்ததும் , அவரை தனது காரில் ஏற்றி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பனசங்கரி பொலிஸ் நிலையத்தில் தனது முன்னாள் கணவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளதா என அறிவதற்கு வைத்தி ய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments