Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தண்டம் விதித்ததில் ஆத்திரமுற்ற நபர் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது கோடாரி கொத்து!


மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தண்டம் விதிக்கப்பட்ட நபர் ஒருவர் , போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது கோடரியால் கொத்தியுள்ளார். 

கோடாரியால் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய பின்னர் விஷம் அருந்தி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தரும் , விஷமருந்திய நிலையில் தாக்குதலாளியும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பலாந்தோட்டை நகர் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

நகரின் மத்தியில் போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் பொலிஸ் உத்தியோகஸ்தர் இருந்த வேளை கோடரியுடன் வந்த நபர் , பொலிஸ் உத்தியகஸ்தரை கொத்தியுள்ளார். பின்னர் தன் வசம் வைத்திருந்த விஷத்தினை அருந்தியுள்ளார். என தெரிவிக்கப்படுகிறது. 

தாக்குதலாளியான குறித்த நபர் கடந்த ஜனவரி 5ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக பொலிஸார் தண்டம் விதித்துள்ளனர். 

அந்நிலையிலையே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் , இருந்த போதிலும் தண்டம் விதித்த பொலிஸார் வேறு நபர் எனவும் , தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் வேறு நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments