இந்த நாட்டின் ஜனாதிபதியாக நான் இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அனைத்து பொருளாதாரத்தின் பின்னணியிலும் அரசியல் உள்ளது. ஏனைய நாடுகளை போன்று நம்மால் ஏன் பொருளாதார கட்டமைப்பு தொடர்பில் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியாதுள்ளது என சிந்திக்க வேண்டும்.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக நான் இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அனைத்து மக்களும் புத்தாண்டை எவ்வாறு கொண்டாடலாம் , விடுமுறைக்கு எங்கு செல்லாம் என்பது தொடர்பில் தற்போது சிந்தித்துக்கொண்டு இருந்திருப்பார்கள் என தெரிவித்தார்.
No comments