Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் மகளும் உயிரிழப்பு - மகன் அதிதீவிர சிகிச்சையில்!


மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த ஜெனரேட்டர் வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

பதுளை கெப்பட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய தாய் மற்றும் அவரது 9 வயது மகள் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். 

கடந்த 29 ஆம் திகதி வீட்டில் இருந்த ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் அவரது மகளும் மற்றும் மகனும் ஆகிய மூவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் இரு பிள்ளைகளும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரது மகள் நேற்று (14) இரவு உயிரிழந்துள்ளதுடன், இன்று காலை தாயும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஐந்து வயதுடைய மகன் ரிட்ஜ்வே லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றான்.

No comments