Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி நாளை வடக்கு , கிழக்கில் போராட்டம்.


சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு -கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி  போராட்டம் இடம்பெறவுள்ளது

எனவே பொதுமக்கள் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு பெண்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments