சமூக செயற்பாட்டாளரான ‘ரட்டா’ (Ratta) எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்று வரும் "கோட்டா கோ கம" போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர் எனவும் , கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
No comments