யாழில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகருக்கு நீதிமன்றம் 1 இலட்ச ரூபாய் தண்டம் விதித்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில்,
யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அதிக விலைக்கு அரிசி விற்ற வர்த்தகர் ஒருவரை கண்டறிந்திருந்தனர்.
குறித்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் மன்றினால் 1 இலட்ச ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
No comments