கிளிநொச்சியில் வீடொன்றில் இருந்து பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 208 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி விவேகானந்த நகரில் உள்ள வீடொன்றினை சுற்றிவளைத்து தேடுதல் நடாத்திய போது வீட்டில் இருந்து கஞ்சா பொதிகளை மீட்டனர்.
அதேவேளை வீட்டில் இருந்த சொகுசு கார் ஒன்றையும் கைப்பற்றிய விசேட அதிரடி படையினர் வீட்டில் தங்கியிருந்த நபரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் மன்னாரை சேர்ந்தவர் எனவும் , அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதிரடி படையினர் தெரிவித்தனர்.
No comments