Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!


சகல அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதிப்பெற்ற பாடசாலைகளுக்கு நாளை 17ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு, பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் சொந்த போக்குவரத்தை அணுகுவதில் சிரமத்தை ஏற்படுத்தியதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த முடிவு நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . 

No comments