வவுனியா ஈரப்பெரிய குளத்தில் நீராடிய மாணவர்களில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஈரப்பெரிய குளத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 15 மற்றும் 16 வயதுகளையுடைய நான்கு மாணவர்கள் நீராடியதாகவும் ,அவர்கள் நால்வரும் நீரில் மூழ்கிய நிலையில் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்ற போதிலும் அவர்களில் இருவர் உயிரிழந்த சிலையில் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளதாகவும் , மற்றைய இருவரும் ஆபத்தான நிலையில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments