Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சுப்பர் மடத்தில் குழு மோதல் - ஐவர் காயம்


யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பருத்தித்துறை கொட்டடியை சேர்ந்த  சிறிமுருகன் சிறிஅஜன் (வயது- 23) , வியாபாரிமூலையை சேர்ந்த தேவநாயகம் பிரேம்ராஜ் (வயது-30) , சுப்பர் மடம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜீவநாயகம் ராஜீவன் (வயது- 26), பொன்னம்பலம் ரகுநாதன் (வயது- 39) மற்றும்  தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது- 41) ஆகியோரே காயமடைந்துள்ளனர். 

கடற்தொழிலில் ஏற்பட்ட முரண்பாடே மோதலாக மாறியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் , தாம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும்  பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

No comments