Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு - தந்தையும் மகனும் படுகாயம்!


அநுராதபுரத்தில் இன்று(2) காலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

தம்புள்ளையில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த முச்சகரவண்டி ஒன்று வீதியினை விட்டு விலகியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த 46 வயதான தாயும், 9 வயதான மகளுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த விபத்தில் 41 வயதான தந்தையும், 14 வயதான மகனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments