Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

குஜராத்தில் மது அருந்திய 26 பேர் உயிரிழப்பு - 30க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்!


இந்தியா குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்திய 26 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். 

குஜராத் மாநிலத்தின் போடாட் மற்றும் அதன் அருகாமை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியவர்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் 

அங்கு சிகிச்சை பலனின்றி  26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மதுபானத்தை தயாரிக்க தேவையான ரசாயனத்தை கொடுத்தவர், மதுபானத்தை விற்றவர் ஆகியோர் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்வது மற்றும் அருந்துவது இரண்டுமே சட்டவிரோதமானது. குஜராத் மாநில அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மதுபானம் அருந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments