வடக்கு மாகாணத்திலுள்ள மதகுருமார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நாளைய தினம் புதன்கிழமை நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படும் என நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல சிரமத்தின் மத்தியில் எரிபொருள் பெற்று வருகின்றார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அனைத்து மக்களுக்கும் எரிபொருள் கிடைக்கும் வண்ணம் புதிய நடைமுறைகளின் கீழ் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருளினை மக்களுக்கு வழங்கி வந்திருந்தோம்.
இவ்வாறான சூழ்நிலையில் மாற்றுத் திறனாளிகள் வைத்தியசாலை செல்வதற்கும் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்வதற்கும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமப்பட்டு வருவதை அவதானித்தேன்.
அதனால் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
அதேவேளை சர்வ மத குருமார்களும் எரிபொருளினை பெற்றுக்கொள்வதில் சிரமப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. அதனால் சர்வ மதகுருமார்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அந்த வகையில், நாளை மாற்றுத் திறனாளிகள் மற்றும் சர்வமத குருமார்களின் மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபாய்க்கும்
முச்சக்கர வண்டிகளுக்கு 2500 ரூபாய்க்கும் கார்களுக்கு 3500 ரூபாய்க்கும் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
No comments