தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், ஒரு பிள்ளை உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பிள்ளையும் தாயும் காப்பாற்றப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாய் தனது 5 வயது மகள் மற்றும் 11 வயது மகனுடன் சந்திரிகா குளத்தில் குதித்துள்ளார் அதில் 5 வயது மகள் உயிரிழந்துள்ளதுடன், 11 வயது மகன் மற்றும் தாய் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் காரணமாக கவலைக்கிடமான நிலையில் உள்ள தாய் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த தாய் சூரியவெவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், அவரிடம் இருந்து 2000 ரூபா பணமும் கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
No comments