நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ சப்பர திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான இன்றைய தினம்
மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பைரதத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை வியாழக்கிழமையும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.
No comments