Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

குமரப்பா , புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் 35ஆவது ஆண்டின் நினைவு தினம்


குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரெண்டு வீரர்களின்  35ஆவது  ஆண்டு நினைவு நாள் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 6 மணியளவில் அவர்களின் நினைவுத்தூபியும் உடலம் எரிக்கப்பட்ட இடமாகிய வல்வெட்டித்துறை தீருவில் நினைவுத்தூபியில் வைத்து நினைவுகோரப்பட்டது,

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் வேலவன் சுவாமி ஆகியோரினால் நினைவுகோரப்பட்டது.

மேலும் இனப்படுகொலை குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம். இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரத்திற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை புலம்பெயர் தமிழர் உட்பட அனைவரும் வாக்களிக்க கூடியவாறு  ஐநா கண்காணிப்பில்  நடாத்த முன்வருமாறு சர்வதேச சமுகத்தை கோருகிறோம் என்ற பதாகை ஒன்றும் ஏந்தப்பட்டதுடன் மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலித்தனர்

No comments